close
Choose your channels

நாகர்கோயில் காசியால் ஏமாந்த நடிகரின் மகள், இன்ஸ்பெக்டரின் மகள் யார்? தீவிர விசாரணை

Tuesday, May 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான கல்லூரி பெண்களை ஏமாற்றிய கயவர்களின் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு குற்றம் நாகர்கோயிலும் நடந்துள்ளது. சிறு வயதில் இருந்தே வசதியுடன் வாழ்ந்த காசி, தன்னுடைய வசீகரமான தோற்றம், டிக்டாக்கில் பெண்ணியம் பேசுதல், ஆகியவற்றில் தான் பல பெண்கள் வீழ்ந்துள்ளனர்.

பள்ளி காலத்தில் இருந்தே பெண்களை மயக்கி அனுபவிப்பது, வீடியோ எடுப்பது பின் மிரட்டி பணம் பறிப்பது போன்ற வேலைகளில் காசி ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. காசிக்கு அரசியல் பிரபலங்கள் பலருடன் தொடர்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடைசியாக காசியிடம் ஏமாந்த பெண் டாக்டர் ஒருவர் கொடுத்த புகாரால் தான் தற்போது காசி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

காசியை விசாரணை செய்ய மூன்று நாட்கள் அனுமதி அளித்துள்ளது நாகர்கோயில் மகிளா நீதிமன்றம். இந்த மூன்று நாட்களில் காசியால் ஏமாந்ததாக கூறப்படும் விஐபிக்களின் மகள்கள், நடிகரின் மகள், இன்ஸ்பெக்டரின் மகள் என லிஸ்ட்டில் உள்ள அனைவரும் பெயரும் வெளிவருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் காசிக்கு புதுவையிலும் ரிசார்ட் உள்ளிட்ட நிறைய சொத்துக்கள் இருப்பதாகவும், பல அரசியல் பிரபலங்கள் இருப்பதாகவும், அவர்கள் குறித்தும் விசாரணையில் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது. பொள்ளாச்சி வழக்கு போல் நீர்த்து போகாமல் இந்த வழக்கில் காசிக்கு உதவிய அரசியல் பிரபலங்கள் அனைவரையும் நீதியின்முன் நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. காசியிடம் நடைபெறும் விசாரணையால் பல அரசியல் பிரபலங்கள் கலக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.