48 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்த ஐதராபாத் போலீஸ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஐதராபாத்தில், நேபாள நாட்டை சேர்ந்த பெண்ணின் சூட்கேஸில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குற்றவாளியை போலீசார் 48 மணி நேரத்தில் கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் பாலா நகர் பகுதியில் ஒரு சூட்கேஸ் அனாதையாக கிடந்ததாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அதில் இளம் பெண் ஒருவரின் பிணம் இருந்தது.
இது தொடர்பான விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் தாரா பெஹாரா என்றும், நேபாள நாட்டை சேர்ந்தவ அவர், சமூக வலைதளத்தின் மூலம் பழகிய விஜய் தோஃபா என்பவரை காதலித்து ஐதராபாத் வந்ததாகவும் தெரியவந்தது.
ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ள தாரா, விஜய்யுடன் நெருக்கமாக இருந்ததால் கர்ப்பமானார். ஆனால், தனக்கு குழந்தை வேண்டாம் என்று அவர் கூற, விஜய் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அந்நிலையில், தாராவின் கழுத்தை நெறித்து விஜய் கொலை செய்தார். பின்னர், ஒரு பெரிய சூட்கேஸ் வாங்கி வந்து, அதில் தாராவின் பிணத்தை வைத்து, ஆளில்லாத இடத்தில் வைத்துவிட்டு தப்பிச் சென்றார்.
சிசிடிவி காட்சியின் மூலம் இதை கண்டுபிடித்த போலீசார், குற்றவாளியை 48 மணி நேரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com