கழிவுநீரில் விழுந்த மூதாட்டியை தூக்கிச்சுமந்த காவலர்… குவியும் பாராட்டு!

  • IndiaGlitz, [Friday,November 12 2021]

புதுச்சேரியில் கழிவுநீர் வாய்க்காலில் விழுந்த 70 வயது மூதாட்டியை காவலர்கள் இருவர் தூக்கிச்சென்று காப்பாற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வுநிலையினால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாக மழைபெய்து வருகிறது. மேலும் மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருக்கிறது. இந்நிலையில் மூலக்குளம் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீர் வாய்க்காலில் சுந்தரி எனும் 70 வயது மூதாட்டி தவறி விழுந்துள்ளார்.

இந்தத் தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் மற்றும் சரவணக்குமார் இருவரும் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மூதாட்டியை கழிவுநீர் வாய்க்காலில் இருந்து மீட்டுள்ளனர்.

மேலும் மூதாட்டியை தங்களது கைகளாலேயே சுமந்த அந்தக் காவலர்கள் மூதாட்டியின் வீட்டிற்கே கொண்டு சென்றதோடு அவருக்கு உடை மற்றும் தேவையான பொருட்களை கொடுத்து உதவியுள்ளனர். இந்தச் சம்பவம் சோஷியல் மீடியாவில் பரவியதை அடுத்து காவலர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

More News

7 மாதத்தில் பாஜகவை விட்டு விலகிய பிரபல நடிகை… காரணம் இதுதான்…

பெங்கால் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்துவரும் ஸ்ரபந்தி சாட்டர்ஜி பாஜகவில் இருந்து விலகிக்கொள்வதாக திடீர்

தெருக்கடையில் டீ அருந்திய முதல்வர்… பூரிப்போடு செல்ஃபி எடுத்த பொதுமக்கள்!

சென்னையில் மழை, வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தபோது முதல்வர்

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை… தமிழகத்திற்கு பாதிப்பா?

அந்தமானில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது

38 வயதில் காதல் திருமணம் செய்த தமிழ் நடிகை!

தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஒருவர் 38 வயதில் காதல் திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது

பாரீஸ் காபிஷாப்பில் விஜய் டிவி தொகுப்பாளினி: வைரல் புகைப்படங்கள்

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருக்கும் ஒருவர் பாரிசில் உள்ள காபி ஷாப்பில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி