close
Choose your channels

இன்று கமல் பிரச்சாரம் நடக்குமா? போலீஸ் அனுமதி மறுப்பு!

Friday, May 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம் குறித்த பேச்சுக்கு பின்னர் அவரது தேர்தல் பிரச்சாரங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதால் இன்று அவருடைய சூலூர் பிரச்சாரத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.

நேற்று முன் தினம் திருப்பரங்குன்றத்தில் கமல் பிரச்சாரத்தின்போது காலணி வீச்சும் நேற்று அரவக்குறிச்சியில் முட்டை மற்றும் கல்வீச்சும் நடைபெற்றதால் இன்று சூலூரில் அவரது பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் இன்றைய கமல்ஹாசனின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடையவுள்ளது. இந்த நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை சூலூரில் நடத்த கமல் திட்டமிட்டிருந்த நிலையில் அவரது பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது பேச்சு அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளதால் இன்றைய பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டாலும் தங்களது கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என மக்கள் நீதி மயயம் கட்சி தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.