தனியார் ரிசார்ட்டில் நிர்வாண நடனம், போதைப்பொருள்… தட்டித் தூக்கிய போலீஸ்!

  • IndiaGlitz, [Monday,September 20 2021]

தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியான பெங்களூர் சாலையில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நேற்றிரவு நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட இளைஞர் பலரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் 37 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அழகிகள் நிர்வாண நடனம் ஆடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

தமிழக எல்லைப் பகுதியான பெங்களூரு- ஆனெக்கல் எனும் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நேற்றிரவு ரேவ் பார்டி என்ற பெயரில் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள் மற்றும் மது பயன்படுத்தப்படுத்தப் படுவதாகக் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்த 2 பெண்கள் உட்பட 37 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த ரேவ் பார்டியில் கலந்து கொண்ட அனைவரும் போதைப்பொருள் மற்றும் மது பயன்படுத்தி இருந்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர்கள் பயன்படுத்திய போதைப்பொருள் மற்றும் சில மது பாட்டில்களையும் பார்டி நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் ரேவ் பார்டியில் கலந்து கொண்ட அழகிகள் பலரும் நிர்வாணம் நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தவிர இந்த பார்டியில் கலந்து கொண்ட 40 பேரும் highapp.com எனும் இணையத் தளத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக இந்த பார்டிக்கு டிக்கெட்டுகளை புக் செய்துள்ளனர். மேலும் இவர்கள் ஐடி கம்பெனிகளில் வேலைப்பார்க்கும் இளைஞர்கள் என்பதோடு 40 பேர் கலந்து கொண்ட நிலையில் 37 பேர் மட்டுமே பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

More News

விவசாயி வங்கிக் கணக்கில் 52 கோடி ரூபாய்? தொடர் கதையாகும் மர்மம்!

பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களின்

ருத்ரதாண்டவம் எடுத்த ருத்ராஜ்… புகழ்ந்து தள்ளிய தல தோனி!

கொரோனா காரணமாகத் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல் 14 ஆவது சீசன் போட்டிகள் நேற்றுமுதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

யூடியூபில் வருமானத்தை அள்ளும் டிவி நட்சத்திரங்கள்!

யூடியூப் என்பது பொழுதுபோக்கு வீடியோ பார்க்கும் தளம் என்பதையும் தாண்டி தற்போது அது வருமானத்தை கொட்டிக் கொடுக்கும் தளமாக மாறி விட்டது. பலர் யூ டியூப்பில் சேனல் தொடங்கி தங்களுக்கு

சரத்குமார் - சுஹாசினி நடிக்கும் புதிய படம்: முழு விபரங்கள்!

பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் சுஹாசினி இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் சில வெளியாகியுள்ளன.

சீயான் விக்ரமின் 'மகான்' படத்தின் மாஸ் அறிவிப்பு!

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்த திரைப்படம் 'மகான்' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதும் தெரிந்ததே