close
Choose your channels

ரெம்டெசிவிர் வாங்க நேரு ஸ்டேடியத்திற்கு வரவேண்டாம்: காவல்துறை அறிவிப்பு

Monday, May 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரனோ நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக நேரு ஸ்டேடியத்தில் விற்பனையாகி வருகிறது

ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்கு நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் வரிசையில் நிற்பதாலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதாலும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனை அடுத்து தமிழக அரசு நேற்று ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுபவர்களுக்கு அவர்கள் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என்றும் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க நேரு ஸ்டேடியம் வர தேவையில்லை என்றும் அறிவித்து இருந்தது 

இந்த நிலையில் சற்று முன் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி தமிழக முதல்வர் உத்தரவுப்படி தனியார் மருத்துவமனைகளில் நாளை முதல் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. எனவே நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால் ரெம்டெசிவிர் மருந்து வாங்க யாரும் நேரில் வர வேண்டாம் என காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.