ரெய்டுக்குப் போன போலீஸ்… வீடு புகுந்து கொள்ளை? பொதுமக்கள் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Thursday,June 10 2021]

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமத்தில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலை அடுத்து சில காவலர்கள் அங்கு ரெய்டுக்கு சென்றுள்ளனர். அப்படி சென்ற காவலர்கள் மலை கிராமத்தில் இருந்த வீடுகளில் புகுந்து 8.5 லட்சம் பணம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளைக் கொள்ளை அடித்துவிட்டதாகவும் இவர்களை கிராம மக்கள் மடக்கிப் பிடித்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு அடுத்த நச்சுமேடு மலைக் கிராமத்தில் முறைகேடான சம்பவங்கள் நடைபெறுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அரியூர் காவல் நிலையத்தில் இருந்து உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் 4 காவலர்கள் ரெய்டுக்கு சென்றதாகவும் அங்கு சென்றபோது அங்கிருந்த வீடுகளில் யாரும் இல்லாததால் போலீசாரே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் இதுகுறித்து கூறும் நச்சுமேடு கிராம மக்கள் யாரும் இல்லாத வீடுகளில் போலீசார் புகுந்து அங்கிருந்த பீரோவை உடைத்து 8.5 லட்சம் பணம் மற்றும் 15 சவரன் நகையைக் கொள்ளை அடித்து விட்டதாகவும் அவர்களை மடக்கிப் பிடித்த கிராம மக்கள் தங்களது பணத்தை மீட்டதாகவும் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன், உடன் இருந்த இளையராஜா, யுவராஜ் ஆகியோர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தை குறித்து உதவி கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களைக் காக்க வேண்டிய காவலர்களே இப்படி செய்யலாமா எனப் பலரும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

More News

பிக்பாஸ் சீசன் 5 எப்போது? 3வது அலைக்கு முன்பே தொடங்க முடிவு!

பிக்பாஸ் தமிழ் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜூன் மாதமே சீசன் 5 தொடங்க திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா

லைக்குகளுக்காக பதிவிட்ட புகைப்படம்...! தற்கொலையில் முடிந்த பரிதாபம்...!

தனது புகைப்படம் தவறாக சித்தரிக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நிதி திரட்டுவதற்காக செஸ் மாஸ்டருடன் போட்டிப்போடும் பிரபல பாலிவுட் நடிகர்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அமீர்கான் கொரோனா நேரத்தில் நொடிந்துபோய் இருக்கும் மக்களுக்கு நன்கொடை வழங்கும் வகையில் நிதி திரட்டி வருகிறார்.

நாடகத்தை நகைச்சுவையாக மாற்றியவர்: நினைவு நாளில் நினைவு கூறும் கமல்ஹாசன்

பிரபல நாடக, திரைப்பட நடிகர் மற்றும் வசனகர்த்தா கிரேஸி மோகன் அவர்கள் மறைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் கமலஹாசன் டுவிட்

விஷ்ணுவிஷால் - ஜூவாலா கட்டா டான்ஸ்: வைரல் புகைப்படம்!

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷாலுக்கும், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது என்பது தெரிந்ததே