பிறந்த நாள் விழாவில் பிரியாணியும் கொரோனாவும் பரிமாறிய அரசியல் பிரமுகர்

அரசியல் பிரமுகர் ஒருவர் தனது பிறந்த நாள் விழாவில் பிரியாணியை மட்டுமின்றி கொரோனாவையும் சேர்த்து பரிமாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிபூண்டியை சேர்ந்த அரசியல் பிரமுகர் குணசேகர். இவர் தன்னுடைய ஐம்பதாவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து 500 பேர்களை அழைத்து பிரியாணி விருந்து வைத்தார். மது மற்றும் மட்டன், சிக்கன் பிரியாணி என்றவுடன் இந்த விருந்தில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

இந்த விருந்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியின்றி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விழா முடிந்த மறுநாள் காய்ச்சல் காரணமாக குணசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா பாசிட்டிவ் என உறுதியானது. இதனை அடுத்து அவர் வைத்த விருந்தை ஏற்பாடு செய்தவர்களுக்கும் பரிசோதனை செய்தபோது 15 பேர்களுக்கு கொரோனா உறுதியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து இந்த விருந்தில் கலந்துகொண்டு பிரியாணி சாப்பிட்ட 500 பேர்கள் தங்களுக்கும் கொரோனா பரவி இருக்குமோ என்ற அச்சத்துடன் தற்போது தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த விருந்தை ஏற்பாடு செய்த குணசேகர் உள்பட 50 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மதுவுடன் ஓசி பிரியாணி என்றவுடன் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்துகொண்ட 500 பேரும் தற்போது கொரோனா பயத்தால் வெளியே வரவே அச்சப்பட்டு கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பேருந்தில் இருந்து திடீரென இறங்கி அலறியடித்து ஓடிய பயணிகள்: கொரோனா படுத்தும்பாடு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் பேருந்தில் பயணம் செய்ததை அறிந்ததும் அந்த பேருந்தில் என்ற சக பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா இருப்பதாக கூறிய டாக்டரை இரும்புக்கம்பியால் அடித்த நபர்: அதிர்ச்சி தகவல்

தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் கொரோனா இருப்பதாக கூறிய டாக்டர் ஒருவரை இரும்பு கம்பியால் அடித்த நபர் ஒருவரால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

7 நாட்களில் கொரோனா பறந்துவிடும்: பாபா ராம்தேவின் புதிய ஆயுர்வேதிக் மருந்து!!!

கொரோனா தடுப்பூசி மட்டுமல்ல கொரோனா சிகிச்சைக்கே இறுதியான மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப் படாமல் உலக மக்கள் திண்டாடி வருகின்றனர்.

கணவரின் கிட்னியை தானம் பெற்ற நபருக்கு 16 வருடங்கள் கழித்து மனைவியும் கிட்னி தானம் செய்த அதிசய நிகழ்வு

அமெரிக்காவில் 16 வருடங்களுக்கு முன்னர் கணவரின் கிட்னியை தானமாகப் பெற்ற நபருக்கு அவருடைய மனைவியும் கிட்னி தானம் செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 

சத்யராஜ் மகளின் முக்கிய தகவலை புரமோஷன் செய்த சிவகார்த்திகேயன்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்பது தெரிந்ததே. இந்த லாக்டவுன் நேரத்தில் மருந்துகள் வாங்கும்போது கவனமாக இருப்பது குறித்தும், காலாவதி தேதியை கவனித்து வாங்க வேண்டும்