ஜோதிகாவின் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்

  • IndiaGlitz, [Monday,July 15 2019]

ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ள நிலையில் தற்போது அவர் 'ஜாக்பாட்' மற்றும் கார்த்தியுடன் ஒரு படம் என இரண்டு படங்களில் அவர் நடித்து வருகிறார் .

இந்த நிலைகள் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இன்னொரு படத்திலும் ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி வெளியானதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று மதியம் 12 மணிக்கு அறிவிக்க இருப்பதாக செய்திகள் வந்தன.

இதன்படி சற்றுமுன்னர் இந்த படத்தின் டைட்டில் 'பொன்மகள் வந்தாள்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலுடன் அட்டகாசமான டைட்டில் லுக்கும் சூர்யாவின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளிவந்துள்ளது. கோவிந்த் வசந்த் இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை ஜேஜே ஃபெட்ரிக் இயக்கவுள்ளார்.

More News

'நேர் கொண்ட பார்வை'யின் புதிய அப்டேட்: போனிகபூரின் டுவீட்

அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படம் குறித்த அப்டேட்டுக்களை போனிகபூரே

மீராவுக்கு பயம் வந்துருச்சு! சேரன் - ஷெரின் உரையாடல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவாக நாமினேஷன் படலம் குறித்த வீடியோ சற்றுமுன் வெளியானது. ஆனால் திடீரென அந்த வீடியோ திடீரென நீக்கப்பட்டு

வனிதாவை அடுத்து குறிவைக்கப்படும் மீரா: இந்த வார நாமினேஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று வெளியேற்றும் படலமும், திங்களன்று நாமினேஷன் படலமும் இருக்கும் என்பது தெரிந்ததே.

சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டுகிறது: பிரபல பாஜக பிரமுகர்

புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாக பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

கடாரம் கொண்டான் படத்தின் கரெக்டான ரன்னிங் டைம்!

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கடாரம் கொண்டான்' என்ற அதிரடி ஆக்சன் படம் வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.