ஆன்மீக பயணத்தில் இணைந்த 'பொன்னியின் செல்வன்' பிரபல நடிகர்கள்.. ரசிகர்கள் வாழ்த்து..!


Send us your feedback to audioarticles@vaarta.com


’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த இரண்டு பிரபல நடிகர்கள் ஆன்மீக பயணம் செய்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும், வசூலிலும் சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில், ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ராஜராஜ சோழன் கேரக்டரில் ரவி மோகன் மற்றும் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் உண்மையிலேயே நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், ரவி மோகன் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் சபரிமலைக்கு மாலை அணிந்து ஆன்மீக பயணம் செய்துள்ளனர். இந்த நேரத்தில், சபரிமலையில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த ஆன்மீக பயணத்தின் மூலம், இருவருக்கும் நல்ல எதிர்கால வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ரவி மோகன் தற்போது ’கராத்தே பாபு’, ’பராசக்தி’ ’ஜெனி’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும், அடுத்த ஆண்டு அவர் ’தனி ஒருவன் 2’ படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல், நடிகர் கார்த்தி ’வா வாத்தியாரே’ மற்றும் ’சர்தார் 2’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் ’கைதி 2’ உள்பட ஒரு சில படங்களில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com