close
Choose your channels

உங்களுக்கு குற்ற உணர்ச்சியே இல்லையா? ஐஸ்வர்யா ராய் குறித்து சரத்குமாரிடம் பார்த்திபன் கேட்ட கேள்வி

Thursday, March 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உங்களுக்கு குற்ற உணர்ச்சியே இல்லையா என ’பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டு விழா மேடையில் சரத்குமாரிடம் பார்த்திபன் கேட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று சென்னையில் ’பொன்னின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் இசை வெளியிட்டு விழா நடந்த போது அதில் பெரியபழுவேட்டரையர் மற்றும் சின்னபெரியபழுவேட்டரையர் கேரக்டர்களில் நடித்த சரத்குமார் மற்றும் பார்த்திபன் உரையாடினர்.

அப்போது பார்த்திபன், ஒரு இளம்பிறை ஐஸ்வர்யா ராயுடன் உங்களை நடிக்க சொன்னால் அப்படி நான் நடிக்க மாட்டேன், எனக்கு வயதாகிவிட்டது என்று அல்லவா நீங்கள் சொல்லி இருக்க வேண்டும்? மணி சாரே சொன்னால் கூட அப்படி ஒரு தவறை நான் செய்ய மாட்டேன் என்று கூறியிருக்க வேண்டாமா? இந்த குற்ற உணர்ச்சியில் இருந்து நீங்கள் எப்படி மீண்டீர்கள்? மேலும் நந்தினியை புறமுதுகு காட்டச் செய்து அவருடைய சங்கு கழுத்தில் உள்ள சங்கிலியை நீங்கள் அவிழ்க்கும் போது என்னை மாதிரி இளைஞர்களை மனதில் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தீர்களா? என்று கேட்டார்

இதற்கு பதிலளித்த சரத்குமார் ’ராணி சொன்னதால்தான், என் கழுத்தில் பாரமாக இருக்கிறது என்று சொன்னதால்தான் நான் அந்த செயினை கழட்டினேன். மேலும் இந்த படத்தில் இயக்குனர் என்ன சொன்னாரோ, அதை மட்டும் தான் செய்தேன்’ என்றார்.

இதனையடுத்து ஐஸ்வர்யா ராய் போன்ற ஒரு அழகான பெண்ணை கண்டும் காணாமல் இருப்பதும் கண்டதும் எரிச்சல் அடைவது எல்லாம் எவ்வளவு கடினமானது? அப்படி என்றால் அந்த சிறப்பான நடிப்பை நான் தான் நடித்துள்ளேன்’ என்று பார்த்திபன் கூற, ஆம் நீங்கள் தான் என்னைவிட நன்றாக நடித்தீர்கள்’ என்று சரத்குமார் தெரிவித்தார்.

மேலும் ஐஸ்வர்யாராய் குறித்து கவிதை கூறுங்கள் என பார்த்திபன் கேட்டபோது நான் புதிதாக கவிதை சொல்வதற்காக புதிதாக ஒரு பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று சரத்குமார் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.