உங்களுக்கு குற்ற உணர்ச்சியே இல்லையா? ஐஸ்வர்யா ராய் குறித்து சரத்குமாரிடம் பார்த்திபன் கேட்ட கேள்வி

  • IndiaGlitz, [Thursday,March 30 2023]

உங்களுக்கு குற்ற உணர்ச்சியே இல்லையா என ’பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டு விழா மேடையில் சரத்குமாரிடம் பார்த்திபன் கேட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று சென்னையில் ’பொன்னின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் இசை வெளியிட்டு விழா நடந்த போது அதில் பெரியபழுவேட்டரையர் மற்றும் சின்னபெரியபழுவேட்டரையர் கேரக்டர்களில் நடித்த சரத்குமார் மற்றும் பார்த்திபன் உரையாடினர்.

அப்போது பார்த்திபன், ஒரு இளம்பிறை ஐஸ்வர்யா ராயுடன் உங்களை நடிக்க சொன்னால் அப்படி நான் நடிக்க மாட்டேன், எனக்கு வயதாகிவிட்டது என்று அல்லவா நீங்கள் சொல்லி இருக்க வேண்டும்? மணி சாரே சொன்னால் கூட அப்படி ஒரு தவறை நான் செய்ய மாட்டேன் என்று கூறியிருக்க வேண்டாமா? இந்த குற்ற உணர்ச்சியில் இருந்து நீங்கள் எப்படி மீண்டீர்கள்? மேலும் நந்தினியை புறமுதுகு காட்டச் செய்து அவருடைய சங்கு கழுத்தில் உள்ள சங்கிலியை நீங்கள் அவிழ்க்கும் போது என்னை மாதிரி இளைஞர்களை மனதில் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தீர்களா? என்று கேட்டார்

இதற்கு பதிலளித்த சரத்குமார் ’ராணி சொன்னதால்தான், என் கழுத்தில் பாரமாக இருக்கிறது என்று சொன்னதால்தான் நான் அந்த செயினை கழட்டினேன். மேலும் இந்த படத்தில் இயக்குனர் என்ன சொன்னாரோ, அதை மட்டும் தான் செய்தேன்’ என்றார்.

இதனையடுத்து ஐஸ்வர்யா ராய் போன்ற ஒரு அழகான பெண்ணை கண்டும் காணாமல் இருப்பதும் கண்டதும் எரிச்சல் அடைவது எல்லாம் எவ்வளவு கடினமானது? அப்படி என்றால் அந்த சிறப்பான நடிப்பை நான் தான் நடித்துள்ளேன்’ என்று பார்த்திபன் கூற, ஆம் நீங்கள் தான் என்னைவிட நன்றாக நடித்தீர்கள்’ என்று சரத்குமார் தெரிவித்தார்.

மேலும் ஐஸ்வர்யாராய் குறித்து கவிதை கூறுங்கள் என பார்த்திபன் கேட்டபோது நான் புதிதாக கவிதை சொல்வதற்காக புதிதாக ஒரு பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று சரத்குமார் தெரிவித்தார்.

More News

முதல் பாகத்தை விட பிரமாண்டம்.. ஐஸ்வர்யா ராயின் இன்னொரு அவதாரம்.. 'PS 2' டிரைலர்..!

மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி

ரிலீசுக்கு 2 நாள் இருக்கும் போது வெற்றிமாறன் செய்த கரெக்சன் ..! என்ன மாற்றம் தெரியுமா?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை' படத்தின் முதல் பாகம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

'மருதநாயகம்' படத்தில் கமலுக்கு பதில் இந்த பிரபல நடிகரா? கைகொடுக்குமா மாஸ்டர் பிளான்..!

 கமல்ஹாசனின் கனவு படம் என்றால் அது 'மருதநாயகம்' தான் என்பதும் கடந்த 1997ம் ஆண்டு இந்த படத்தை எடுக்க அவர் முயற்சி செய்த நிலையில் பட்ஜெட் காரணமாக இந்த படம் நிறுத்தப்பட்டது

'ஏகே 62' படத்தை அடுத்து விக்னேஷ் சிவனின் அடுத்த படமும் டிராப்?

அஜித் நடிக்க இருக்கும் 'ஏகே 62' என்ற திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் திடீரென அவர் அந்த படத்தில் இருந்து விலகினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

குறைவாக சம்பளம் கொடுத்ததால் திருடினேன்.. ஐஸ்வர்யா வீட்டில் திருடிய ஈஸ்வரி வாக்குமூலம்..!

ஐஸ்வர்யா வீட்டில் திருடிய ஈஸ்வரி, காவல்துறையிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தனக்கு குறைவாக சம்பளம் கொடுத்ததால் தான் திருடினேன் என்றும் தான் திருடுவதற்கு காரணம் ஐஸ்வர்யாவின்