close
Choose your channels

அடுத்தடுத்து வெளியாகிறதா 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்கள்?

Sunday, February 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்டமான திரைப்படமான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டு பாகங்களும் அடுத்தடுத்த சிறிய இடைவெளியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் விரைவில் ராஜஸ்தான் செல்ல உள்ளனர். ராஜஸ்தானில் நடக்கும் படப்பிடிப்புடன் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இரண்டு பாக படப்பிடிப்புகள் முடிவடைய உள்ளதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது

அதன் பின்னர் போஸ்ட் புரடொக்சன்ஸ் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் தொடங்கும் என்றும் இந்த படத்தின் இரண்டு பாகங்களும் அடுத்தடுத்த ஒரு சிறிய இடைவெளியில் வெளியிட மணிரத்தினம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ், நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் மோகன் பாபு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், லால், சரத்குமார், உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்க உள்ளார். இந்த படம் லைக்கா நிறுவனத்தின் ரூபாய் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.