பொன்னியின் செல்வன் வழக்கு.. ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த நீதிமன்றம் உத்தரவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பொன்னியின் செல்வன் குறித்த வழக்கில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இரண்டு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில் ’பொன்னின் செல்வன் ’படத்தின் இரண்டாம் பாகத்தின் ’வீர ராஜவீரா’ பாடல் காப்புரிமை தொடர்பான வழக்கில் ஏஆர் ரஹ்மான்2 கோடி ரூபாய் செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனது தந்தை இசையமைத்த சிவா ஸ்துதி என்ற பாடலை காப்பியடித்து தான் வீரா ராஜ வீரா என்ற பாடல் உருவாக்கப்பட்டதாக பாடகர் டாகர் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சிவா ஸ்துதி பாடலின் உந்துதலால் தான் இந்த பாடலை உருவாக்கியதாக ரஹ்மான் தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டிருந்தது. இதனை அடுத்து இரண்டு கோடி ரூபாய் நீதிமன்ற பதிவாளர் இடம் செலுத்தவும் என்றும் மனுதாரருக்கு ரூபாய் 2 லட்சம் வழங்கவும் ஏ ஆர் ரஹ்மானுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com