close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' படம் குறித்த மாஸ் அறிவிப்பு!

Saturday, September 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாக படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டதாக சற்று முன்னர் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

அமரர் கல்கி எழுதிய ’பொன்னியின் செல்வன்’ என்ற நாவலின் அடிப்படையில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை உருவாக்க எம்ஜிஆர், சிவாஜி, கமல் முதல் பல முன்னணி நடிகர்கள் முயற்சி செய்தனர் ஆனால் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் மற்றும் மணிரத்னம் ஆகியோர் எடுத்த முயற்சி மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோன்ற ஒரு முயற்சியை இனிமேல் ஒருவரால் எடுக்க முடியுமா? என்பதும் சந்தேகமே!

இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் நிலையில் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தை பார்க்க அமரர் கல்கியின் வாசகர்களும், சினிமா ரசிகர்களும், அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.