close
Choose your channels

வந்தியத்தேவனும், வானில் மாயாஜாலமும்: வைரலாகும் பொன்னியின் செல்வன் புகைப்படம்!

Thursday, September 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் அஹில்யா என்ற கோட்டையின் அருகே இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக ஏற்கனவே நடிகை த்ரிஷா மற்றும் விக்ரம் உள்ளிட்டோர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் பொன்னியின் செல்வன் கதையின் நாயகனாக வந்தியதேவன் கேரக்டரில் நடித்து வரும் கார்த்தியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்று முன்னர் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

நீல வானத்தில் மேகங்கள் கவிதை நடைபோடும் அழகிய புகைப்படத்தை பதிவு செய்துள்ள அவர், வானில் ஒரு மாயாஜாலம் என்று இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதை அடுத்து வந்தியத்தேவனின் மாயாஜால புகைப்படம் வைரலாகி வருகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 500 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.