close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு குறித்த அப்டேட் தெரிவித்த பிரபல நடிகர்

Wednesday, February 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது என்பது தெரிந்ததே.

இந்த படப்பிடிப்பில் முக்கிய நடிகர்களுடன் நடிகர் ரியாஸ் கானும் கலந்து கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தாய்லாந்து படப்பிடிப்பிலும் கலந்து கொண்ட ரியாஸ்கான் ஐதராபாத் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார் என்பதும் இந்த படத்தில் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் தன் சமூக வலைத்தளத்தில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் இதனை அடுத்து தான் சென்னை திரும்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் ரவிவர்மன் ஒளிப்பதிவில், தோட்டாதரணி கலை இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.