close
Choose your channels

"பொன்னியின் செல்வன்" புதுச்சேரியில்.....!இணையத்தில் வைரலாகும் ஷூட்டிங் போட்டோஸ்....!

Wednesday, July 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் இணையத்தையே கலக்கி வருகின்றன.

கல்கி அவர்களின் தலைசிறந்த நாவலான ‘பொன்னியின் செல்வன்’ என்ற கதையை, திரைப்படமாக்க வேண்டும் என்பதே மணிரத்னம் அவர்களின் கனவாகும். அந்த கனவை நனவாக்கும் வகையில், அதற்கு உயிர் கொடுத்து, நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்து சென்ற 2019-இல் இப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர். இத்திரைப்படத்தில் கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஜெயராம் ஜெயம் ரவி, விக்ரம், பேபி சாரா, த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருக்கிறார்கள்.

வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தி, ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரம், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ளார். இப்படத்தை 2 பாகங்களாக வெளியிட முடிவு செய்த படக்குழு, அடுத்தவருடம் முதல் பாகத்தை வெளியிடுவோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது .

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள், புதுச்சேரியில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இவை சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் கலந்துள்ளனர். கடலருகில் கப்பல், போர் கேடயங்கள், குடில்கள் போன்றவை வெகுவாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.