close
Choose your channels

மீண்டும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பா? படக்குழுவினர் விளக்கம்!

Saturday, May 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கியுள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தின் சில காட்சிகள் மீண்டும் படமாக்கப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்

யூடியூப் சேனலில் சிலர் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் சில காட்சிகள் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு திருப்தி இல்லை என்று கூறியதாகவும், அதனால் மணிரத்னம் அந்த காட்சிகளை மீண்டும் படமாக்கப் போவதாகவும் வதந்தியை பரப்பி வருகின்றனர்.

இந்த வதந்தி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வந்த நிலையில் படக்குழுவினர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர். ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் படமாக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் திட்டமிட்டபடி இந்த படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் 1 செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் விரைவில் தொடங்கவுள்ளது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos