close
Choose your channels

மகளுடன் சென்னையில் படம் பார்த்த ஐஸ்வர்யாராய்..  PS1 படக்குழுவுடன் போட்டோ!

Monday, October 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் உலகம் முழுவதும் இந்த படம் மூன்று நாட்களில் 220 கோடி ரூபாய்க்கு மேல் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் வெற்றிக்கு இதில் நடித்த அத்தனை நட்சத்திரங்களும் மிகவும் சிறப்பாக நடித்து இருந்தனர் என்பதும் குறிப்பாக நந்தினி கேரக்டரில் நடித்திருந்த ஐஸ்வர்யாராய் நடிப்புக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்த என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் சென்னையில் 'பொன்னியின் செல்வன்' படம் பார்க்க வந்திருந்தார். இதனை அடுத்து 'பொன்னியின் செல்வன்' படக்குழுவினர் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

விக்ரம், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி , த்ரிஷா, மணிரத்னம், சுஹாசினி, கார்த்தி உள்ளிட்டோர் ஐஸ்வர்யாராயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos