உங்களுக்கு வந்தால் ரத்தம், பொதுமக்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? விஜய்க்கு கேள்வி எழுப்பிய பிரபலம்!

  • IndiaGlitz, [Thursday,April 07 2022]

உங்களுக்கு வந்தால் ரத்தம், பொதுமக்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என நடிகர் விஜய்க்கு பிரபலம் ஒருவர் தனது சமூக வலைதளத்தின் மூலம் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தளபதி விஜய்யின் சார்பில் இன்று வெளியான அறிக்கை ஒன்றில் அரசியல்வாதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மீம்ஸ் மற்றும் பதிவுகள் செய்யக் கூடாது என்றும் அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையை விமர்சித்துள்ள பால் முகவர் சங்க நிர்வாகி பொன்னுசாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

அரசு அதிகாரிகளை, அரசியல்வாதிகளை சமூக வலைதளங்களிலோ, போஸ்டர் மூலமோ, பொதுவெளிகளிலோ அவமானப்படுத்தினால் விஜய் மக்கள் இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள விஜய் அவர்கள் தனது திரைப்பட வெளியிட்டு சமயங்களில் தனக்கோ, திரைப்பட காட்சிகள் குறித்தோ, கட்அவுட் வைத்து அதன் மேலேறி அதற்கு மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்கிறேன் என்கிற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வீண் வேலைகளில் ஈடுபட கூடாது எனவும், தங்களின் உயிரை துச்சமாக எண்ணி அவ்வாறு செயல்படுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி ரசிகர்களை நல்வழிப்படுத்த ஏன் முன் வரவில்லை..?

அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வந்தால் மட்டும் ரத்தம், ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் என்றால் அது தக்காளி சட்னியா சிந்திப்பாரா விஜய்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

More News

'வந்தான் சுட்டான் ரிப்பிட்டு': பிரபல இயக்குனரின் அடுத்த பட டைட்டில்!

பிரபல இயக்குனரின் அடுத்த பட டைட்டில் 'மாநாடு' திரைப்படத்தின் மாஸ் வசனமான,  'வந்தான் சுட்டான் ரிப்பிட்டு' என வைக்கப்பட்டுள்ளது 

அடுத்த பாட்டை ரிலீஸ் பண்ணலாமா? அனிருத் கொடுத்த 'பீஸ்ட்' மாஸ் அப்டேட்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சிவகுமாருடன் நடித்த நாயகிகள்: வைரலாகும் குரூப் போட்டோ!

பழம்பெரும் நடிகரும் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையுமான நடிகர் சிவக்குமாருடன் நடித்த நடிகைகளின் குரூப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தோனியின் மூளை எப்படி வேலை செய்கிறது? சுவாரசியமான ஆராய்ச்சியில் ஈடுபட்ட முக்கிய வீரர்!

இந்தியக் கிரிக்கெட்டில் முக்கிய ஜாம்பவனாக இருந்துவரும் மகேந்திரசிங் தோனியின் மனது எப்படி வேலை செய்கிறது என்பதைத்

'நானே வருவேன்': தனுஷின் மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட செல்வராகவன்!

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'நானே வருவேன்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது என்பதும் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது