close
Choose your channels

தடுப்பூசிக்கு NO… கொரோனா பாதித்த பிரபல நடிகையின் கருத்தால் சர்ச்சை!

Monday, October 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நான் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியைத்தான் நம்பியிருக்கிறேன். நான் தடுப்பூசி போடுவது இல்லை என்கிற முடிவில் இருக்கிறேன் என்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பிரபல நடிகை பூஜா பேடி தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.

பாலிவுட்டில் பிரபலமாக இருந்துவரும் நடிகை பூஜா பேடி கொரோனா இரண்டாம் அலை நோய்த்தொற்று ஏற்பட்டபோதே தனது வருங்கால கணவர் மானெக் கான்டிராக்டருடன் கோவா சென்றிருந்தார். மேலும் தனது கோவா டிரிப்பை பற்றி வீடியோ வெளியிட்ட அவர், “வாழ்க்கை வாழ்வதற்கே, வீட்டிற்குள் அடைந்திருப்பதற்கு அல்ல. ஓராண்டாக மாஸ்க் அணிந்தாகிவிட்டது. வைரஸ் போவதாக இல்லை. நான் கொரோனாவால் இறந்தால் சந்தோஷம்தான். நான் ஃபிரீயாக வாழ்கிறேன்“ என்று தெரிவித்து இருந்தார். நடிகை பூஜா பேடியின் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அப்போதே கடும் விமர்சனத்தை தெரிவித்து இருந்தனர்.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவர் “கடந்த இரண்டு நாட்களாக இருமல் மற்றும் காய்ச்சலாக இருக்கிறது. முதலில் அலர்ஜியாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டேன். பின்னர் பரிசோதனை செய்துபார்த்தபோது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன்.

மேலும் எனது வருங்கால கணவர் மற்றும் வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. நான் தடுப்பூசி போடுவது இல்லை என்ற முடிவிலிருக்கிறேன். நான் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியைத்தான் நம்புகிறேன். எனவே உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யுங்கள். தயவுசெய்து பயப்பட வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார். நடிகை பூஜா பேடி தெரிவித்த இந்தக் கருத்து சோஷியல் மீடியாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.