close
Choose your channels

திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டதா? ஒரே ஒரு புகைப்படத்தால் பதில் சொன்ன பூர்ணா!

Friday, August 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை பூர்ணாவின் நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பூர்ணாவின் திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டதாக சமூகவலைதளத்தில் வதந்திகள் பரவிய நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரே ஒரு புகைப்படத்தை பதிவு செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின் ஆடுபுலி, வேலூர் மாவட்டம், தகராறு உள்பட பல திரைப்படங்களில் நடிகை பூர்ணா, சூர்யா நடித்த காப்பான் திரைப்படத்திலும் நடித்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை பூர்ணா துபாய் தொழில் அதிபர் சானித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. நிச்சயதார்த்த புகைப்படங்கள் பூர்ணாவின் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வைரலானது. மேலும் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென பூர்ணாவின் திருமண நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டதாகவும் திருமணம் நிறுத்தப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது.

இதற்கு அவ்வப்போது பதில் கூறி வந்த பூர்ணா, தற்போது தனது சமூக வலைத்தளத்தில் தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ஒட்டுமொத்தமாக வதந்திக்கு முடிவு கட்டியுள்ளார். இதனையடுத்து பூர்ணாவின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.