close
Choose your channels

என்னை இனிமேல் இப்படித்தான் கூப்பிடணும்.. விசித்ராவுக்கு நிபந்தனை விதித்த மாயா-பூர்ணிமா..!

Wednesday, November 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் மாயா மற்றும் பூர்ணிமா செய்த தவறுகளை கமல்ஹாசன் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து அவர்கள் இருவரும் திருந்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போதைக்கு திருந்த வாய்ப்பு இல்லை என்று தான் அடுத்தடுத்த நாட்களில் அவர்களுடைய விளையாட்டின் தன்மை தெரிகிறது.

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் விசித்ரா ஒரு சிறு வேண்டுகோள் வைக்கிறார். நான் அம்மாவாக நடிக்க வில்லை, என்னால் நடிக்கவும் முடியாது, உங்களை பார்க்கும்போது எனது குழந்தைகளை பார்ப்பது போல் தான் இருக்கிறது, அதை கிண்டல் பண்ணி, சீப்பா, டிராமா என்று பேசுவது எனது மனதை மிகவும் வருத்தப்பட வைக்கிறது. என்னை இனிமேல் விசித்ரா மேம் என்று கூப்பிடுங்கள், நான் மரியாதையை எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.

மேலும் இதே 50 வயதில் நிறைய பேர் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். அதனால் இப்போது நான் விட்டுக் கொடுத்தால் இது தவறான உதாரணமாக வெளியில் போகும் என்று கூறினார்.

அப்போது பூர்ணிமா, ‘விசித்ரா மேம் நீங்களும் இனிமேல் என்னை பூர்ணிமா மேம் என்று கூப்பிடுங்கள்’ என்று கூற உடனே மாயாவும் ’எனக்கும் நீங்கள் மரியாதை கொடுங்கள் விசித்ரா மேம்’ என்று கிண்டலுடன் கூற நொந்து போன விசித்திரா பதில் பேசாமல் அமைதியாக சென்றுவிடும் காட்சியுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வருகிறது. மொத்தத்தில் மாயா பூர்ணிமாவின் அட்டகாசம் இப்போதைக்கு ஓயாது போல் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.