close
Choose your channels

கே.பாக்யராஜ் வீட்டில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்

Wednesday, September 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான கே பாக்யராஜின் வீட்டில் நிகழ்ந்த சோகம் ஒன்றுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கே பாக்யராஜின் மனைவியும் நடிகையுமான பூர்ணிமா பாக்யராஜின் தாயார் சுபலட்சுமி என்பவர் இன்று காலமானார். அவருக்கு வயது 85.

கடந்த சில நாட்களாக அவர் உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சுபலட்சுமி அவர்களுக்கு பூர்ணிமா பாக்கியராஜ் என்ற மகளும் ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த சுபலட்சுமி அவர்களின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என தெரிகிறது. கே பாக்யராஜின் மாமியாரும் பூர்ணிமா பாக்யராஜ் தாயாருமான சபலட்சுமியின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.