close
Choose your channels

ஒரு லைக்குக்கு இத்தனை விசாரணையா? போப் ஆண்டவரைச் சுற்றும் புது சர்ச்சை!!!

Saturday, November 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு லைக்குக்கு இத்தனை விசாரணையா? போப் ஆண்டவரைச் சுற்றும் புது சர்ச்சை!!!

 

சமீபத்தில் பதிவிடப்பட்ட ஒரு பிகினி உடையணிந்த மாடல் புகைப்படத்திற்கு போப் ஆண்டவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து லைக் செய்யப்பட்டதாகப் புது சர்ச்சை ஒன்று கிளம்பி இருக்கிறது. இதனால் இன்ஸ்டாகிராம் நிர்வாகத்திடம் வாடிகன் சிட்டி தற்போது விளக்கம் கேட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரபல பிரேசிலிய மாடல் ஒருவரின் பிகினி உடையணிந்த புகைப்படம் நவம்பர் 13 ஆம் தேதி அன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் புகைப்படத்தை போப் ஆண்டவர் பிரான்சிஸ் பெயரில் இருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து லைக் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை, ஏனெனில் போப் பிரான்சிஸ் அவர்களின் சமூக வலைத்தள ஊடகங்களை நிர்வகிப்பதற்கு தனி குழுவே இருக்கிறது.

மேலும் போப் பிரான்சிஸ் தன்னுடைய சமூக வலைத்தளங்களை எப்போதும் நேரடியாகப் பயன்படுத்துவதே இல்லை. இப்படி இருக்கும்போது இந்த லைக் செய்யப்பட்ட விவகாரம் எதனால் ஏற்பட்டது என்பதைக் குறித்து தற்போது விசாரணை தீவிரப்படுத்தப் பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சமூக வலைத்தளங்கள் பிரபல மனிதர்களுக்கும் சில நேரங்களில் தலைவலியாக அமைந்து விடுகிறது எனப் பலரும் இச்சம்பவம் குறித்து விமர்சித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.