விவாகரத்து பெற்றவருடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்ற நடிகை.. போலீசில் புகார்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல நடிகையும், மேக்கப் ஆர்டிஸ்ட்டுமான அஸ்மிதா, தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதா, கடந்த 2017 ஆம் ஆண்டு விஷ்ணுகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், திடீரெனக் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். ஆனால், சில மாதங்களிலேயே மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்த நிலையில், அஸ்மிதாவுக்கு மூன்றாவது குழந்தை சமீபத்தில் பிறந்தது.
இந்தச் சூழலில், அஸ்மிதா மற்றும் விஷ்ணுகுமார் இடையே மீண்டும் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கின. இருவரும் மாறி மாறி ஊடகங்கள் மூலம் புகார்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தனது கணவர் விஷ்ணுகுமார் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்துவதாக அஸ்மிதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விஷ்ணுகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com