பயிற்சி வீடியோவுக்கு பதில் பாலியல் வீடியோ: விசாரணைக்கு உத்தரவிட்ட பி.எஸ்.எப்

  • IndiaGlitz, [Wednesday,June 14 2017]

எல்லை பாதுகாப்பு படை என்று அழைக்கப்படும் பி.எஸ்.எப் வீரர்களுக்கு அவ்வப்போது வீடியோ மூலம் பயிற்சி அளிப்பது வழக்கம். இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை நுழையவிடாமல் தடுப்பது எப்படி என்பது குறித்த விளக்கங்கள் அந்த வீடியோவில் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் உள்ள எல்லை பாதுகாப்பு பயிற்சி முகாமில் வீடியோ பயிற்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
பி.எஸ்.எப் அதிகாரி ஒருவரின் லேப்டாப்பில் இருந்து திரையில் பயிற்சி வீடியோ திரையிடப்பட்டது. ஆனால் பயிற்சி வீடியோவுக்கு பதிலாக அதில் ஆபாச படம் ஒடியதால் பயிற்சிக்கு வந்திருந்த ஆண் மற்றும் பெண் பி.எஸ்.எப் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒருசில வினாடிகளில் அந்த அதிகாரி சுதாரித்து கொண்டு அந்த வீடியோவை நிறுத்திவிட்டார். இருப்பினும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பயிற்சி வீடியோ தயாரிப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரி இத்தனை கவனக்குறைவாக இருந்ததை மன்னிக்க முடியாது என்றும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் தவறு செய்த அதிகாரிக்கு கடும் தண்டனை காத்திருப்பதாக பி.எஸ்.எப் வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

தினசரி பெட்ரோல்-டீசல் விலையை தெரிந்து கொள்வது எப்படி?

நாளை மறுநாள் முதல் அதாவது ஜூன் 16ஆம் தேதி முதல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் சர்வதேச சந்தை நிலவரப்படி மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் தினசரி பெட்ரோல், டீசல் விலையை தெரிந்து கொள்வது எப்படி? என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது...

ஆர்.கே.சுரேஷின் புதிய பட டைட்டில் அறிவிப்பு

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் அறிமுகமான ஆர்.கே.சுரேஷ், அதன் பின்னர் 'மருது', 'தர்மதுரை', ஆகிய படங்களில் நடித்தார்...

சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் திடீர் கைது

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே குழப்பமான அரசியல் சூழ்நிலை இருந்து வரும் நிலையில் இன்று பெரும் பரபரப்புகளுக்கு இடையே தமிழக சட்டமன்றம் கூடியது. இன்று காலை 10 மணிக்கு சட்டமன்றம் கூடியவுடன் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது...

இன்று முதல் அடுத்தகட்டத்திற்கு செல்லும் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பதையும் இன்னும் பத்து நாட்கள் பேட்ச்வொர்க் மட்டுமே மீதமிருப்பதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்...

'பாகுபலி' போன்ற படம் இயக்குவதை மிஸ் செய்தது எப்படி? சுசீந்திரன்

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் காலடி எடுத்த வைத்த இயக்குனர் சுசீந்திரன் 'அழகர் சாமியின் குதிரை', 'ஜீவா, 'பாண்டியநாடு', ஆதலினால் காதல் செய்வீர்', பாயும் புலி' போன்ற வெற்றி படங்களை இயக்கி இன்று கோலிவுட்டின் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்.