ரூ.50 மினிமம் பேலன்ஸ், பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை. வங்கிகள் கெடுபிடியால் மவுசு கூடிய அஞ்சலகங்கள்

  • IndiaGlitz, [Wednesday,March 08 2017]

தனியார் வங்கிகள் மட்டுமின்றி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியும் மினிமம் பேலன்ஸ் உள்பட பல்வேறு நிபந்தனைகளை வாடிக்கையாளர்களுக்கு விதித்து வருகிறது. சேமிப்பு கணக்குகளில் ரூ.5000 மினிமம் பேலன்ஸ் மற்றும் 4 முறைக்கு மேலான பரிவர்த்தனைக்கு கட்டணம் என புதிய நிபந்தனைகளை வங்கிகள் சமீபத்தில் அறிவித்தன. பெரிய பணக்காரர்களுக்கு ரூ.5000 மினிமம் பேலன்ஸ் என்பது ஒரு பிரச்சனையே இல்லை. ஆனால் நடுத்தர மற்றும் ஏழை எளியவர்கள் அந்தந்த மாதங்களில் கிடைக்கும் வருமானமே போதாத நிலையில் இருக்கும்போது ரூ.5000 மினிமம் பேலன்ஸை எப்படி மெயிண்டன் செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில் அதிக கெடுபிடி இல்லாத, ரூ.,50 மட்டுமே மினிமம் பேலன்ஸ் வைக்கக்கூடிய, எளிதில் சேமிப்பு கணக்கு தொடங்கக்கூடிய அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு தற்போது மவுசு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான அஞ்சலகங்களில் தற்போது ஏடிஎம் கார்டு, செக்புக் ஆகிய வசதிகள் இருப்பதால் ஏழை எளியோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அஞ்சலகங்களில் அடைக்கலம் அடைகின்றனர். மேலும் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, தலைமை அஞ்சல்துறை தலைவர் எம்.சம்பத் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வங்கிகளில் தற்போது 4 முறைக்கு மேல் பரிவர்த்தனை மேற்கொண்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே அவர்கள் இப்பிரச்சினையில் இருந்து விடுபட அஞ்சல் நிலையங்களில் சேமிப்புக் கணக்குத் தொடங்கலாம். இந்த சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.50 இருந்தால் போதும். அதேபோல், அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்குத் தொடங்கி ஏடிஎம் கார்டு பெற்று அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். அஞ்சல் நிலையங்களில் சேமிப்புக் கணக்குத் தொடங்குவது மிகவும் எளிது. சேமிப்புக் கணக்குத் தொடங்க புகைப்படம் மற்றும் முகவரி சான்றை அளித்தால் போதுமானது.

தமிழகம் முழுவதும் 2,612 அஞ்சல் நிலையங்கள் உள்ளன. இதில், தலைமை அஞ்சல் நிலையங்கள் 94-ம், துணை அஞ்சல் நிலையங்கள் கிராமப் பகுதியில் 1,312-ம், நகர்ப்புற பகுதியில் 1,206-ம் என மொத்தம் 2,518 உள்ளன. இதைத் தவிர பகுதிநேர மாக செயல்படக் கூடிய கிளை அஞ்சல் நிலையங்கள் கிராமப்புற பகுதியில் 8,947-ம், நகர்ப்புற பகுதியில் 331-ம் உள்ளன.

இதைத் தவிர, நாடு முழுவதும் 2,513 அஞ்சல் நிலையங்களில் கோர் பேங்கிங்' வசதி உள்ளது. தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலைய ஏடிஎம்கள் 97 உள்ளன. எனவே பொதுமக்கள் அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்குத் தொடங்கி எவ்வித கட்டணமும் இன்றி தங்களது பணப்பரிவர்த்தனையை எத்தனை முறை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.

இவ்வாறு சம்பத் கூறினார்.

More News

வரலட்சுமியின் 'சேவ் சக்தி' திட்டத்திற்கு விஷால் உள்பட நடிகர் நடிகையர் ஆதரவு

நடிகை பாவனாவுக்கு நேர்ந்த பாலியல் சம்பவத்திற்கு பின்னர் பெண் கலைஞர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகை வரலட்சுமி ஆரம்பித்த அமைப்புதான் 'சேவ் சக்தி.

ஓபிஎஸ் உண்ணாவிரத மேடையில் தனுஷ், விஜய் ஆண்டனி பாடல்கள்

முன்னாள் முதல்வர் ஓ,பன்னீர்செல்வம் அவர்கள் இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்

'நீ சாதிச்சிட்ட'. சூப்பர் ஸ்டார் ரஜினிடம் பாராட்டு பெற்ற வெற்றி பட நடிகர்

தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் விக்டர் என்ற கேரக்டரின் மூலம் விஸ்வரூபம் எடுத்த அருண்விஜய் 'வெற்றிமாறன்' என்ற கேரக்டரில் நடித்த படம் 'குற்றம் 23'

ரஜினி-கமல் இணைந்து பார்க்கும் பிரபல ஹீரோவின் படம்?

'சதுரங்க வேட்டை' என்ற வெற்றி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் நட்டி நட்ராஜ் நடித்த 'எங்கிட்டே மோதாதே' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றது.

40 வருடங்களுக்கு முந்தைய மருத்துவமனையில் விஜய்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னை பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.