close
Choose your channels

இன்று பிரேத பரிசோதனை; சித்ரா மரணத்தின் மர்மம் விலகுமா?

Thursday, December 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று ஓட்டல் அறை ஒன்றில் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தப் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் அவரது மரணத்தின் மர்மம் விலகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

நேற்று அதிகாலை சின்னத்திரை நடிகை சித்ரா தான் தங்கியிருந்த ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருடன் ஹேமந்த் என்பவர் இருந்தார் என்பதும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் விசாரணையில் ஏற்கனவே தாங்கள் இருவருக்கும் பதிவு திருமணம் செய்துவிட்டதாக விசாரணையில் ஹேமந்த் கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் சித்ராவின் உடல் இன்று காலை 10 மணிக்கு பிரேத பரிசோதனை செய்ய இருப்பதாகவும் இந்தப் பிரேத பரிசோதனையின் முடிவில் சித்ராவின் மரணத்தின் மர்மங்கள் விலகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்கொலை, கொலை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய மூன்று கோணங்களில் தற்போது போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் இந்த பிரேத பரிசோதனை அறிக்கை விசாரணைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று கருதப்படுகிறது

மேலும் சித்ராவின் செல்போன் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த செல்போன் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் சித்ரா தற்கொலை செய்து கொண்ட அறையில் அவர் கையால் எழுதப்பட்ட கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பதால் தற்கொலை என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.