விளம்பரத்தில் நடிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம். ராஜ்கிரண்

  • IndiaGlitz, [Tuesday,April 11 2017]

திரையுலகில் நடித்து கொண்டிருக்கும் பெரும்பாலான பிரபலங்கள் விளம்பரப்படத்திலும் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். அதே நேரத்தில் கோடி கொடுத்தாலும் விளம்பரப்படத்தில் நடிக்க முடியாது என்று கூறும் ஒருசில நடிகர்களும் இதே துறையில் உள்ளார்கள். இந்த நிலையில் விளம்பர படத்தில் நடிப்பது குறித்து 'பவர்பாண்டி' நாயகன் ராஜ்கிரண் கூறியதாவது:
ஒரு திரைப்படத்தில் நடிக்கும்போது ஒரு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. ஆனால் விளம்பரத்தில் நடிப்பது என்பது முழுக்க முழுக்க காசுக்காக நடிப்பதே ஆகும். விளம்பரத்தில் நடிப்பதை நான் கேவலமாக நினைக்கின்றேன்.
ஒரு பொருளை பற்றி ஒன்றுமே தெரியாமல் கோடிக்கணக்கான பணத்திற்காக விளம்பரத்தில் நடிப்பது என்னை பொறுத்தவரையில் பொதுமக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.
என்னை பொதுமக்கள் நடிகனாக மட்டுமின்றி அவர்களுடைய குடும்பத்தில் உள்ள ஒருவனாக பார்க்கின்றனர். நான் ஒரு பொருளை விளம்பரப்படுத்தினால், ராஜ்கிரணே சொல்லிவிட்டார், இந்த பொருள் நன்றாகத்தான் இருக்கும் என்று என்னை நம்பி வாங்குவார்கள், நான் விளம்பரப்படுத்தும் பொருள் ஒரு தப்பான பொருளாக இருந்தால் அது, பொதுமக்களுக்கு செய்யும் துரோகமாக கருதுகிறேன்' என்று கூறியுள்ளார்.

More News

வடபழனி கோவிலில் பிச்சை எடுக்கும் ஜெயலலிதாவுடன் நடித்த நடிகை

கனவுத்தொழிற்சாலையான திரையுலகில் பகட்டான வாழ்க்கை, பலகோடி சொத்துக்களுடன் வாழும் நட்சத்திரங்கள் ஒருசிலர் இருந்தாலும், இதே திரையுலகில்தான் ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்படும் தொழிலாளர்களும் உள்ளனர்

டெல்லியில் மண்சோறு சாப்பிட்ட பிரேமலதா விஜயகாந்த்

தமிழக விவசாயிகள் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக டெல்லியில் வங்கிக்கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நாளை நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் தேர்தல் அதிகளவிலான பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

ரம்யாகிருஷ்ணனிடம் ராஜமெளலி மன்னிப்பு கேட்டது ஏன்?

'பாகுபலி' என்ற ஒரே படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றுவிட்ட பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய திரைப்படமான 'பாகுபலி 2' படத்தை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கின்றது. ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள இந்த படத்தில் சிவகாமி என்ற கேரக்டரில் மிக அற்புதமாக நடித்த ரம்யா கிருஷ்ணனிடம் இயக்குனர் ராஜமெளல&

ராதிகாவின் ராடன் மீடியாவில் வருமான வரித்துறையினர் சோதனை

ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக அம்மா வேட்பாளராக இருந்த டிடிவி தினகரனுக்கு ஆதரவு என்று அறிவித்த அடுத்த நாளே சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை இட்டனர்...