ரூ.10 கோடி மோசடி செய்த பிரபல நகைச்சுவை நடிகர் கைது

  • IndiaGlitz, [Tuesday,March 07 2017]

ரூ.10 கோடி கொடுத்தால் ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.1000 கோடி கடன் பெற்று தருவதாக வாக்குறுதி கொடுத்து ரூ.10 கோடி கமிஷனை பவர்ஸ்டார் சீனிவாசன் பெற்றதாகவும், ஆனால் சொன்னபடி கடன் வாங்கி தராமல் மோசடி செய்ததாகவும் புகார் செய்யப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்தும் பவர்ஸ்டார் சீனிவாசன் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பவர்ஸ்டார் சீனிவாசன், இன்று சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் பவர்ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்து உள்ளனர்.
பவர்ஸ்டார் சீனிவாசன் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

More News

மீனவர் உயிர் என்ன கிள்ளுக்கீரையா? இனியும் வேடிக்கை பார்க்கலாமா மத்திய மாநில அரசுகள்?

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, மீனவர்களை தாக்கிக் காயப்படுத்துவதோடு அவர்களுடைய படகு மற்றும் வலைகளை சேதப்படுத்துவது,

தமிழக மீனவர்களும் இந்தியர்கள்தான். இலங்கை துப்பாக்கி சூட்டுக்கு என்ன செய்ய போகிறது மத்திய அரசு

கடந்த பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர்களால் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் புதிய சாதனை

பிரபல பாடகி விஜயலட்சுமி சமீபத்தில் இசையா? திருமணமா? என்ற கேள்வி வந்தபோது மன தைரியத்துடன் இசையை தேர்வு செய்து திருமணத்தை நிறுத்தினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவர் எடுத்த முடிவு சரியானது என்பதை நிரூபிப்பது போல் தற்போது அவர் இசையில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்....

'பவர்பாண்டி' படம் பார்த்து பாராட்டிய இசையமைப்பாளர்

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பல அவதாரங்களில் ஜொலித்து வரும் தனுஷ், முதன்முறையாக இயக்கிய திரைப்படம் 'பவர்பாண்டி'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...