பிரபாஸின் 'சாஹோ' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,May 21 2019]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்களால் உலக அளவில் புகழ் பெற்ற நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் பிரமாண்டமான திரைப்படம் 'சாஹோ'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தயாரித்து வரும் யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'சாஹோ' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

பிரபாஸ், ஷராதா கபூர், நீல் நிதிஷ் குமார், அருண்விஜய், மந்த்ராபேடி, ஜாக்கி ஷெராப், டினு ஆனந்த், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சுஜித் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஷங்கர் ஈஷான் லாய் என்பவர் இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.மதி ஒளிப்பதிவில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
 

More News

தர்பாரில் தொடரும் 'பேட்ட' செண்டிமெண்ட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே அதில் முக்கியமாக இடம்பெற்றிருப்பது அசத்தலான ஓப்பனிங் பாடல். அதிலும் இந்த ஒப்பனிங் பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடுவது

ஐஸ்வர்யாராய் குறித்த சர்ச்சை மீம்ஸ்: வருத்தம் தெரிவித்த நடிகர்!

நேற்று முன் தினம் மக்களவை தேர்தலின் பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தபோது அஜித்தின் 'விவேகம்' படத்தில் நடித்த நடிகர் விவேக் ஓபராய்

கேடிஎம் பைக்குகளை குறிவைத்து திருடிய சென்னை இளைஞன் கைது!

விலை உயர்ந்த கேடிஎம் பைக்குகளை குறிவைத்து திருடிய சென்னை இளைஞன் ஒருவனை போலீசார் குறிவைத்து பிடித்து கைது செய்துள்ளனர்.

சரத்குமார், ராதிகாவுடன் விஷால் ரகசிய சந்திப்பா?

நடிகர் சங்க தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் நாசர், விஷால், கார்த்தி உள்பட பலர் மீண்டும் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஒன்றரை டன் வெயிட்டுடா'! சூர்யாவின் பதிலுக்கு சிஎஸ்கே கமெண்ட்

நடிகர் சூர்யா இன்று டுவிட்டரில் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்