'பாகுபலி' படக்குழுவினர்களை பாராட்டிய பாரத பிரதமர்

  • IndiaGlitz, [Monday,July 27 2015]

உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்து வரும் 'பாகுபலி' திரைப்படத்திற்கு இதுவரை ரசிகர்கள் மற்றும் திரையுலக விஐபிகளிடம் இருந்து பாராட்டுக்களை கிடைத்து வந்தது. தற்போது இந்திய அளவில் உயர்பதவியில் இருப்பவர்களும் படக்குழுவினர்களை பாராட்டி வருகின்றனர்.

ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா கவர்னர் நரசிம்மன், தெலுங்கானா உள்துறை அமைச்சர் நரசிம்மரெட்டி ஆகியோர் இந்த படத்தை சமீபத்தில் பாராட்டிய நிலையில் நேற்று முன் தினம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் பிரபாஸ் உள்பட படக்குழுவினர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் உச்சகட்டமாக 'பாகுபலி' குழுவினர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமான பாரத பிரதமர் நரேந்திரமோடி, நேற்று படக்குழுவினர்களை நேரில் வரவழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்னும் 'பாகுபலி' படத்தை பார்க்கவில்லை. எனினும் விரைவில் அவர் 'பாகுபலி' படத்தை பார்க்க நேரம் ஒதுக்குவார்' என எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி படக்குழுவினர்களை சந்தித்த தகவலை பிரதமர் மோடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிவகாமி ரம்யாகிருஷ்ணனுக்கு நேர்ந்த கஷ்டமான அனுபவம்

தென்னிந்திய திரைப்படமான பாகுபலி முதன்முதலாக ரூ.400 கோடி வசூலை தாண்டி ரூ.500 கோடியை நோக்கி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இந்த படம் இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் படமாக மாறியுள்ளது. இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நட்சத்திரங்களும், இந்த படத்தில் பணியாற்றியதில் பெருமைப்படுவதாக கூறி வருகின்றனர். .....

'அஜீத் 57' படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்குகிறதா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது......

சகலகலாவல்லவனுடன் கனெக்ஷன் ஆகும் பாயும்புலி

தனுஷ் நடித்த படிக்காதவன், மாப்பிள்ளை ஆகிய படங்கள் உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய சுராஜ், தற்போது இயக்கி முடித்துள்ள திரைப்படம் 'சகலகலாவல்லன் அப்பாடக்கர். ....

ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி படத்தில் ஜி.வி.பிரகாஷ்-சஞ்சிதா ஷெட்டி

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரி ஏ.ஆர்.ரஹைன்னா, ஒரு இசையமைப்பாளர் மற்றும் பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் தற்போது முதல்முறையாக தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.....

லட்சுமி மேனனின் பேய் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்

சிபிராஜ் நடித்த 'நாய்கள் ஜாக்கிரதை' படத்டை இயக்கிய சக்தி செளந்திரராஜன் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கி வருவது குறித்து ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்து வரும் லட்சுமி மேனக்கு பேய் வேடம் என்று பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இயக்குனர் சக்தி இதுகுறித்து தற்போதĬ