close
Choose your channels

பிரபுதேவாவுக்கு திருமணம் நடந்தது உண்மையா? ராஜூ சுந்தரம் விளக்கம்!

Saturday, November 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வரும் பிரபுதேவாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்து விட்டதாக இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியானது/ இந்த செய்தியை பிரபுதேவா தரப்பினர் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பிரபுதேவாவின் சகோதரரும் நடன இயக்குனருமான ராஜசுந்தரம் பிரபுதேவாவுக்கு திருமணம் நடந்தது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார். பிரபுதேவாவுக்கும் டாக்டர் ஹிமானி என்பவருக்கும் கடந்த மே மாதம் சென்னையில் திருமணம் நடந்ததாகவும் இருவரும் தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபுதேவாவின் வீட்டில் வசித்து வருவதாகவும் ராஜசுந்தரம் தெரிவித்துள்ளார். மேலும் பிரபுதேவா திருமணம் செய்து கொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்றும் ராஜசுந்தரம் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபுதேவாவுக்கு இடுப்பில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து பிசியோதெரபி செய்ய வந்த டாக்டர் தான் ஹிமானி என்றும் பிரபுதேவாவுக்கு டாக்டர் ஹிமானி பிசியோதெரபி செய்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக பிரபுதேவாவுக்கும் ரமலத் என்பவருக்கும் கடந்த 1995ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்பதும் அதன் பின்னர் பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் ஏற்பட்ட காதல் காரணமாக பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் நயன்தாராவுடன் இருந்த காதலும் கடந்த 2012ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து இருவரும் பிரிந்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.