நடிகர் பிரபுதேவாவிற்கு ரகசியத் திருமணம்?

  • IndiaGlitz, [Thursday,November 19 2020]

 

சினிமா துறையில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமான பிரபுதேவா தனது திறமையால் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல அவதாரங்களை எடுத்துத் தற்போது நட்சத்திர அந்தஸ்தில் வலம் வருகிறார். இவருடைய நடனத்திற்கு மட்டுமே உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் பிரபுதேவா தன்னுடைய சென்னை இல்லத்தில் பெற்றோர் சம்மதத்துடன் பீகாரை சேர்ந்த பிசியோரெசி டாக்டர் ஒருவரை ரகசியத் திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரவுதேவாவிற்கு ஏற்கனவே ரமலதா என்பவருடன் திருமணம் நடைபெற்று 3 குழந்தைகள் இருக்கின்றனர். அதில் முதல் குழந்தையான 12 வயது சிறுவன் மூளை கோளாறு காரணமாக உயிரிழந்து விட்டார். பின்பு கடந்த 2010 வாக்கில் நடிகை நயன்தாராவை பிரபுதேவா விரும்புகிறார், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற தகவல் ஊடகங்களில் கசிந்தது. இதை விரும்பாத ரமலதா மகளிர் அமைப்புகளை நாடி தனது தரப்பு நியாயத்தை கோரி வந்தார். இதனால் இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு கடந்த 2011 ஆம் ஆண்டு ரமலதாவை பிரவுதேவா விவாகரத்து செய்தார்.

9 வருடங்களுக்கு பிறகு தற்போது பிசியோதெரபி டாக்டர் ஒருவரை பிரபுதேவா திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இத்திருமணத்திற்கு அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமே வந்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது. நடிகர் சல்மான் கானை வைத்து ராதே எனும் இந்தி திரைப்படத்தை இயக்கி வரும் பிரபுதேவா அந்த பணிக்காக மும்பையில் கடந்த சில மாதங்களாக தங்கி வந்தார். அப்போது அவருக்கு முதுகுவலி காரணமாக பிசியோதெரபி மருத்துவரிடம் சென்றதாகவும் அந்நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத்தவிர பிரவுதேவாவின் திருமணம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் அவருக்கு பல திரை நட்சத்திரங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரபுதேவா நடனம் அமைத்த ரவுடி பேபி பாடல் தற்போது 100 கோடி ரசிகர்களை சென்றடைந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் சுரேஷ் மகனா இவர்? ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி அனைத்து போட்டியாளர்களுக்கும் சவாலான ஒரு போட்டியாளராக இருந்தது மட்டுமின்றி

45 வயது பெண்ணுடன் 29 வயது இளைஞர் கள்ளக்காதல்: இருவரின் மரணத்திற்கு பின் தெரிந்த உண்மை!

29 வயது இளைஞர் ஒருவர் 45 வயது பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு இருந்தது இருவரின் மரணத்திற்கு பின்னர் தெரிய வந்துள்ளதால் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்

ஒரு ஆப்பிள் போனை வாங்குவதற்காக சிறுநீரகத்தை விற்றவர் கதி! பதைக்க வைக்கும் தகவல்!!!

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சந்தைக்கு வரும்போதெல்லாம் சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கும்.

திருமண நாளில் மனைவி அனுப்பிய பால்கொழுக்கட்டை: பிக்பாஸ் போட்டியாளர் நெகிழ்ச்சி!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவராகிய ஆரி நேர்மையுடன் விளையாடி வருவதாகவும் அவர் இறுதி வரை செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் பார்வையாளர்கள் மத்தியில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன 

கொரோனா, எபோலாவைவிட கொடிய வைரஸால் புது ஆபத்து??? பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்!!!

கொரோனா, எபோலாவைவிட புது கொடிய வைரஸின் பாதிப்புகளைப் பற்றி சமீபத்தில் அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.