நடிகர் பிரபுவுக்கு கொரோனாவா? அவரே அளித்த விளக்கம்

  • IndiaGlitz, [Friday,October 02 2020]

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று சென்னையில் அவரது மணிமண்டபத்தில் பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிவாஜியின் மகன் பிரபு கலந்து கொள்ளவில்லை. இதனை அடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு என்று வதந்திகள் பரவியது.

இதுகுறித்து நடிகர் பிரபு ஊடகமொன்றுக்கு விளக்கம் அளித்துள்ளார். தனது காலில் சிறு காயம் ஏற்பட்டாதால், தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்ததாகவும், காயத்துடன் கலந்து கொள்ள வேண்டாம் என்பதால் தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் தனக்கு வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் தான் முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட சிவாஜி பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிவாஜியின் மகன் ராம்குமார் மற்றும் பிரபுவின் மகன் விக்ரம்பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

நெருக்கடியில் தோனியின் படை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் துபாயில் இன்று நடக்கும் 14ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம்ஷெட்டியும் இல்லையா? பரபரப்பு தகவல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் போட்டியாளரா? என நடிகை சனம் ஷெட்டி பேட்டி எடுத்தவரையே திருப்பிக் கேள்வி வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனம்ஷெட்டியும் இல்லையா?

இயக்குனர் அவதாரம் எடுத்து அஜித் பட தயாரிப்பாளர்: அனிருத் வாழ்த்து

அஜீத் நடித்த 'மங்காத்தா' உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் தயாநிதி அழகிரி என்பதும் இவர் மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களின் பேரன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன்

எலிமினேஷன் யாருன்னு இனிமே வெளியே கசியாது: பிக்பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டே நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சி குறித்த பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன

அவமானத்தில் அனைவரும் தலையை தொங்கவிட வேண்டும்: விஜய் நாயகி ஆவேசம்

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹாத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது