இன்று தொடங்க வேண்டிய பிரதீப் ரங்கநாதன் படப்பிடிப்பு திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று காலை 11:07 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை 11:07 மணிக்கு தொடங்கும் என்றும் புதிய போஸ்டர் வெளியாகி இருந்தது என்பதையும் பார்த்தோம்.
அஜித் நடித்து வரும் "குட் பேட் அக்லி" படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில், மமீதா பாஜு நாயகியாக நடிக்கிறார் என்றும், மேலும் சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இளம் இசையமைப்பாளர் சாய் அபிநயங்கார் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைவதை அடுத்து, இன்றைய படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டதாகவும், காலை 11:07க்கு தொடங்க வேண்டிய படப்பிடிப்பு சில மணி நேரங்கள் கழித்து தொடங்கும் என்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும், பாரதிராஜா குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Due to the unfortunate passing of Manoj Bharathiraja Sir, son of legendary filmmaker Bharathiraja Sir, the #PR04 'FIRST SHOT BOOM' is postponed to a later time today.
— Mythri Movie Makers (@MythriOfficial) March 26, 2025
Our heartfelt condolences to the family. May the family find strength and peace in these tough times.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments