அப்பாவும் மகனும் ஒரே பெண்ணை காதலிக்கிறார்களா? பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தின் கதை?


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரதீப் ரங்கநாதன் நடித்த ’லவ் டுடே’ ‘டிராகன்’ என அடுத்தடுத்த இரண்டு படங்கள் சூப்பர் ஹிட் ஆகி, 100 கோடியை வசூலித்து தந்த நிலையில், தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் கதை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தில், கீர்த்தி ஷெட்டி மற்றும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட்-புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் கதைப்படி அப்பாவும் மகனும் ஒரே பெண்ணை காதலிப்பது போன்ற கதையம்சம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் இருவரும் காதலிக்கும் அந்த பெண் ஒரு விலைமாது என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் ’சிந்து சமவெளி’ மற்றும் ’அபூர்வ ராகங்கள்’ போன்ற படங்களில் இதே போன்ற காட்சிகளை கொண்டிருந்த நிலையில், ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தின் கதை எப்படி இருக்கும் என்பதை படம் வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments