'அரியர் வச்சா மாஸ்' என்ற வசனம் ஏன்? 'டிராகன்' பிரதீப் ரங்கநாதன் விளக்கம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான ‘டிராகன்’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கின்ற நிலையில், இந்த படத்திற்காக அவர் பல ஊடகங்களில் பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் இடம் பெற்ற "அரியர் வச்சா மாஸ்" என்ற வசனத்திற்கான விளக்கத்தை அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ‘டிராகன்’ ட்ரைலரில் "அரியர் வச்சா மாஸ்" என்ற வசனம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இப்போதுதான் எல்லோரும் படித்து முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், இது போன்ற வசனங்கள் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரதீப் ரங்கநாதன், "அரியர் வச்சா மாஸ் இல்லை, படிக்குறது தான் மாஸ். அதை சொல்லும் படம் தான் இது. அரியர் வைத்ததால், காலேஜை விட்டு வெளியே போன பிறகு ஹீரோ கஷ்டங்களை அனுபவிப்பதை சொல்லும் படம் தான் ‘டிராகன்’ என விளக்கம் அளித்துள்ளார்.
அதே நேரத்தில், "என்னுடைய ஒரிஜினல் கேரக்டர் அந்த பையன் மாதிரி கிடையாது. நான் நன்றாக படிப்பேன். பன்னிரண்டாம் வகுப்பில் 98% மதிப்பெண் எடுத்தேன். அதன் பிறகு கல்லூரியில் சேர்ந்து, எந்த விதமான அரியர் இல்லாமல் பட்டம் பெற்றேன். கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி, ஒரு ஐடி கம்பெனியில் ஒன்றரை வருடம் வேலை பார்த்தேன்.
அதன் பிறகு, என் ஃப்ரீ நேரத்தில் குறும்படங்கள் எடுத்து வந்தேன். அதன் பிறகு தான் ’கோமாளி’ திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. நான் மிக இளம் வயதில் ’கோமாளி’ பட வாய்ப்பு பெற்றதற்கு காரணம் என்னுடைய கல்விதான். படிப்பு எப்போதும் உதவி தான் செய்யும். கல்வி எனக்கு ரொம்ப உதவி செய்தது" என்று கூறியுள்ளார்.
இந்த பேட்டியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com