close
Choose your channels

2 டோஸ் தடுப்பூசி போட்டும் பிரபல நடிகைக்கு 2-ஆவது முறையாக கொரோனா!

Wednesday, October 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரைப்படங்களில் வளர்ந்துவரும் நடிகையாக இருப்பவர் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால். இவர் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான “விரட்டு” எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்து இருந்தார். தற்போது தெலுங்கில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக “அகண்டா“ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

தெலுங்கு சினிமாவைத் தவிர கன்னட மொழித் திரைப்படங்களிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வாலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் மீண்டும் இயல்பு நிலைமைக்குத் திரும்பியுள்ளார். பின்னர் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளார்.

தற்போது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால், தனக்கு மீண்டும் 2 ஆவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் “எனக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதித்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பிறகும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். தற்போது மருத்துவர்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கடந்த 10 நாட்களில் என்னை சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்“ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவை அடுத்து அவருடைய ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.