close
Choose your channels

இரட்டை குழந்தைகளுக்கு அன்னப்பிரஷன் செய்த சின்னத்திரை ஜோடி!

Monday, April 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெரியதிரை போலவே சின்னத்திரையிலும் பல நட்சத்திர ஜோடிகள் உருவாகி இருக்கிறார்கள் என்பதும் அவர்களில் ஒரு ஜோடி பிரஜின்-சான்ட்ரா என்பதும் தெரிந்ததே. பல தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பிரபலமடைந்த நடிகை சாண்ட்ரா, விஜய் டிவியில் சின்னத்தம்பி சீரியல் மூலம் பிரபலமான பிரஜினை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகள் கழித்து சாண்ட்ரா, கர்ப்பமானதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். இந்த குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது பிரஜன்-சான்ட்ரா தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தங்களது இரட்டை குழந்தைகளுக்கு கோவிலில் அன்னப்பிரஷன் விசேஷத்தை செய்து முடித்துள்ளனர். அன்னப்பிரஷன் என்றால் பால் மட்டுமே குடித்து கொண்டிருந்த குழந்தைகள் முதல் முதலாக திட உணவை சாப்பிட ஆரம்பிக்கும் விழா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அன்னப்பிரஷன் விசேஷம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து பிரஜன்-சான்ட்ரா தம்பதிகளுக்கும், அவர்களுடைய இரட்டை குழந்தைகளுக்கும் நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.