close
Choose your channels

எனக்கு கிடைத்த சரியான அடி: தேர்தல் முடிவு குறித்து பிரபல நடிகர்

Thursday, May 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினார். கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த பிரகாஷ்ராஜ், தான் வெற்றி பெறுவது உறுதி என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது நம்பிக்கை தெரிவித்தார்

ஆனால் தென் மாநிலங்களில் பாஜக அலை அடித்த ஒரே மாநிலம் கர்நாடகம் மட்டுமே என்பதால் அந்த அலையில் பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்தார். பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் அவர்களால் மூன்றாவது இடமே பெற முடிந்தது

இந்த நிலையில் தனது தோல்வி குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியபோது, '`எனக்கு கிடைத்த சரியான அடி. இன்னும் பெரிய விமர்சனங்கள், கேலிகள் என்மேல் வைக்கப்படும். ஆனாலும் நான் என் நிலையிலிருந்து மாறப்போவதில்லை. மதச்சார்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும்... நீண்டதூரம் செல்லவேண்டிய கடினமான பயணம் தொடங்கியிருக்கிறது. இதுவரை என்பால் நின்ற அனைவருக்கும் நன்றி... ஜெய்ஹிந்த்'' என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.