ஏழைகளுக்கு இலவசமாகக் கொரோனா தடுப்பூசி வழங்கிய சூர்யா, கார்த்தி பட நாயகி!

  • IndiaGlitz, [Thursday,June 17 2021]

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “மாஸ்”, நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “சகுனி” உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் கொரோனா நேரத்தில் இவர் ஆக்சிஜன் சிலிண்டர்களை இலவசமாக வழங்குவது, ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவது எனப் பல்வேறு நிவாரணப் பொருட்களை வழங்கி வந்தார்.

அந்த வகையில் தற்போது பிரணிதா தனது அறக்கட்டளையில் பதிவு செய்துள்ள பல நூறு பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை சொந்த செலவில் வழங்கியுள்ளார். இதற்காக பெங்களூருவில் உள்ள ஆர்.வி மருத்துவமனையில் முகாம் அமைத்து கொரோனா தடுப்பூசி வழங்கியுள்ளார். இதனால் நடிகை பிரணிதாவிற்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தெலுங்கு, இந்தி, கன்னடம் எனப் பல மொழிப்படங்களில் ரவுண்டு கட்டி நடித்துவரும் நடிகை பிரணிதா கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவான “உதயன்” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சமீபத்தில் நடிகர் அதர்வா முரளியுடன் இணைந்து “ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்‘’ எனும் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் கடந்த மே 30 ஆம் தேதி இவருக்கு பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் நிதின் ராஜுவுடன் திருமணம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

More News

கிஷோர் கே சாமி மீது புகார் அளித்த தமிழ் நடிகை

கிஷோர் கே சாமியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று ஒரு வழக்கில் கைது செய்தனர் என்பதும், இதனையடுத்து அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரிந்ததே

உடலுறவு மூலம் பரவும் வைரஸ்… புற்றுநோயாக மாறும் கொடுமை? தவிர்ப்பது எப்படி!

புற்றுநோய் வகைகளில் கருப்பை வாய்ப் புற்றுநோய் என்பதும் ஒன்று. இந்தப் புற்றுநோய் 99% உடலுறவின்போது வெளிப்படும்  (Human Papilloma Viruses-HPV) எனும்

முதல்நாளே கொரோனா வார்டில் ஆய்வுசெய்த கலெக்டர்… நெகிழ்ச்சி சம்பவம்!

கரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நேற்று பிரபுசங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

வொர்க் அவுட் மீது தீராகாதல் கொண்ட 90 வயது பெண்மணி… அசத்தும் வீடியோ!

வொர்க் அவுட், உடற்பயிற்சி ஏன் நடைபயிற்சி மீதுகூட நம்மில் பலருக்கு நாட்டம் இருப்பதில்லை. ஆனால் ஜப்பானை சேர்ந்த 90 வயது மூதாட்டி டாக்கிஷிமா மீகா என்பவர்

சாமியார் போர்வையில் பித்தலாட்டக்காரர்கள்: நடிகர் மயில்சாமி பேட்டி

சாமியார் என்ற போர்வையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சாமியார் நித்யானந்தா நாட்டை விட்டே