'கேம் ஓவர்' இயக்குனரின் அடுத்த படத்தில் சமந்தா? ஹீரோ யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,February 20 2020]

நடிகை டாப்ஸி நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ’கேம் ஓவர்’ இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அஸ்வின் சரவணன் இயக்கவுள்ள அடுத்த படம் சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கதை அம்சத்துடன் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் பிரசன்னா ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் சமந்தா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமந்தா நடிப்பது உறுதி செய்யப்பட்டால் பிரசன்னா மற்றும் சமந்தா முதல் முறையாக இணைந்து நடிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்சேதுபதி நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோக நடிகை சமந்தா ஒரு வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

More News

இருக்கவே இருக்கு 'யூடியூ': 'திரெளபதி இயக்குனர் அதிரடி

ஜி மோகன் இயக்கிய 'திரெளபதி திரைப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியான நிலையில் இந்த டிரைலர் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கார்த்தியின் அடுத்த பட தயாரிப்பாளர், இயக்குனர் குறித்த தகவல்

நடிகர் கார்த்தி கடந்த ஆண்டு 'தேவ்', கைதி' மற்றும் 'தம்பி' ஆகிய 3 படங்களில் நடித்த நிலையில் இந்த ஆண்டு அவர் சுல்தான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இனியும் நடக்கக்கூடாது இதுபோன்ற ஒரு விபத்து: தனுஷ்

நேற்றிரவு 'இந்தியன் 2' படப்பிடிப்பு தளத்தில் நடந்த கோர விபத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா உள்பட மூவர் பரிதாபமாக பலியான சம்பவம் படக்குழுவினர்களை மட்டுமின்றி

விடைத்தாளில் ரூ.100.. பாஸாகிவிடலாம்.. மோசடிக்கு வழி சொல்லிய தலைமையாசிரியர்..! மாட்டிவிட்ட மாணவர்.

எந்த கேள்விக்கும் விடை அளிக்காமல் விட்டுவிடாதீர்கள்.. விடைத்தாளில் ரூ.100 மட்டும் வையுங்கள்.. ஆசிரியர்கள் உங்களுக்கு நிச்சயம் மதிப்பெண் தருவார்கள்.

திருமண வாழ்க்கையின் அழகான தருணங்கள் – புகைப்படங்களை டிவிட்டரில் பதிவிட்ட பிரியங்கா காந்தி

காங்கிரஸ் பொதுச் செயலாளரும் சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி தனது 23 ஆவது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.