close
Choose your channels

சினேகா-பிரசன்னா விவாகரத்தா? இந்த புகைப்படம் கூறும் உண்மை என்ன?

Monday, November 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான சினேகா மற்றும் பிரசன்னா ஆகிய இருவரும் பிரிய போவதாகவும் விவாகரத்து பெற இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் ஒரே ஒரு புகைப்படம் மூலம் இந்த வதந்திக்கு முடிவு கட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 2000ம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா, 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினேகா - பிரசன்னா ஆகிய இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருவார்கள் என்பதும் இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் கடந்த சில நாட்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகிறது.

இந்த வதந்திக்கு முடிவு கட்டும் வகையில் நடிகை சினேகா தனது சமூக வலைத்தளத்தில் பிரசன்னாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ’ஹாப்பி வீக் எண்ட்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த ஒரு புகைப்படம் சினேகா-பிரசன்னா விவாகரத்து குறித்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்பதை உறுதி செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.