ஒரு வீட்டுக்கு ஒரு வாக்கு.. விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் கூறிய அறிவுரை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சிக்கு அரசியல் ஆலோசனை செய்யும் நபராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், "ஒரு வீட்டுக்கு ஒரு வாக்கு" என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அறிவுரை கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இக்கட்சிக்கு ஆலோசனை செய்ய விருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடைபெற்ற நிலையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளையும் அவர் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், "ஒரு வீட்டுக்கு ஒரு வாக்கை உறுதி செய்ய வேண்டும்" என பிரசாந்த் கிஷோர் விஜய்க்கு அறிவுரை கூறியதாகவும், குறிப்பாக தமிழக இளைஞர்களின் வாக்குகளை குறிவைத்து வியூகங்களை அமைக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கட்சி கட்டமைப்பு, நிர்வாகிகளின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு பிரசாந்த் கிஷோர் சிறப்பு ஆலோசகராக செயல்படுவார் என்றும் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments