close
Choose your channels

காவிரி ஆற்றில் போட்டோஷூட்: இளம்ஜோடி மரணத்தில் திடுக்கிடும் தகவல்!

Thursday, November 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருமண நிச்சயம் செய்யப்பட்ட சந்துரு மற்றும் சசிகலா ஜோடி திருமணத்திற்கு முன்னர் பிரீ போட்டோஷூட் எடுக்க முடிவு செய்து முதுகளத்தூரில் உள்ள காவிரி ஆற்றுக்கு வந்து மீனவர் ஒருவரின் படகில் அமர்ந்து கொண்டு போட்டோ ஷூட்டை எடுத்தபோது திடீரென தடுமாறியதால் படகு கவிழ்ந்து பரிதாபமாக பலியாகினர் என்ற செய்தியை பார்த்தோம்.

இந்த சம்பவத்தில் தற்போது திடுக்கிடும் தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவிரி ஆற்றில் போட்டோஷூட் எடுக்க சந்துரு, சசிகலா மற்றும் படகோட்டி ஆகிய மூவரும் படகில் சென்றதாகவும், இதனையடுத்து கரையில் நின்று கொண்டிருந்த போட்டோகிராபர் விதவிதமாக போஸ் கொடுக்க சொல்லி புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரிகிறது. இந்த போட்டோகிராபர் சசிகலாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் டைட்டானிக் படத்தில் வருவது போன்ற ஒரு போஸ் கொடுக்க போட்டோகிராபர் கூறியதை அடுத்து இருவரும் படகின் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென சசிகலா அணிந்திருந்த ஹைஹீல்ஸ் காலணி சறுக்கியதால் அவர் தவறி விழுந்ததாகவும் இதனால் படகு பேலன்ஸ் தவறி கவிழ்ந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

படகில் செல்லும் சுற்றுலா பயணிகள் லைஃப்ஜாக்கெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை இருக்கும் நிலையில் அந்த விதிமுறையை பின்பற்றாததால் தான் இந்த விபத்து நேர்ந்து இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.