close
Choose your channels

புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பாரத பிரதமர்: பிரேமலதா உளறல்

Friday, March 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் இணைந்து நான்கு தொகுதிகளை பெற்ற விஜயகாந்தின் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் எம்.ஜி.ஆர் பாடல் என்று சிவாஜி பட பாடலான 'ஒளிமயமான எதிர்காலம்' என்று உளறிய பிரேமலதா தற்போது புல்வாமா தாக்குதலை நடத்தியது பாரத பிரதமர் மோடி என்று மீண்டும் உளறியுள்ளார். எதிரி நாடுகளையும் நட்பு நாடாக பழகி வருபவர் நமது பிரதமர் மோடி. ஆனால் நம் நாட்டிற்கு ஒரு ஆபத்து என்றால் வேடிக்கை பார்க்க மாட்டார். சமீபத்தில் புல்வாமா தாக்குதலை நடத்தி தான் தைரியமானவர் என்று நிரூபித்தவர் நமது பாரத பிரதமர் மோடி' என்று பிரேமலதா நேற்று நடந்த பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசினார்.

அதேபோல் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழகத்தில் ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு கேரளாவில் எலியும் புலியுமாக உள்ளனர் என்று கூறினார். எலியும் பூனையுமாக என்று சொல்வதற்கு பதில் எலியும் புலியுமாக இருப்பதாக அவர் கூறியதை கேட்டு பலர் சிரித்ததும் உடனே சுதாரித்து கொண்டு தனது தவறை திருத்தினார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த மோடி, எலியும் புலியுமாக என்று பிரேமலதா உளறியதை நெட்டிசன்கள் கேப் விடாமல் கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.