close
Choose your channels

திமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா

Thursday, October 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானுக்கு அவருக்கு நெருக்கமானவர்களே கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கமலஹாசன் அவர்களும் இதேபோல் சமீபத்தில் பேசினார். திமுகவினர்களும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பல விவாதங்களில் பேசியுள்ளனர். அதேபோல்தான் சீமானும் தற்போது பேசியுள்ளார். சீமானின் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றால் அவரை போல் ஏற்கனவே பேசியவர்களின் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும்.

எனவே எந்த நோக்கத்திற்காக பேசிகின்றோமோ அந்த நோக்கத்திற்காக மட்டும் பேசினால் அனைவருக்கும் நல்லது. ராஜீவ் காந்தி நமது தமிழ் வழியில் மரணம் அடைந்துள்ளார். இந்த தீவிரவாதத்தை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. ராஜீவ் காந்தியின் மரணம் துரதிருஷ்டமானது. நிச்சயமாக சீமானின் கருத்து வரவேற்கதக்கது அல்ல. இருப்பினும் சீமானின் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றால் அதே போல் பேசிய மற்ற கட்சியையும் செய்ய வேண்டும் என்று பிரேமலதா தெரிவித்தார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.